பாடியவர்: சங்க வருணர் என்னும் நாகரியர் திணை: காஞ்சி துறை: பெருங்காஞ்சி பெரிது ஆராச் சிறு சினத்தர், சில சொல்லால் பல கேள்வியர், நுண் ணுணர்வினாற் பெருங் கொடையர் கலுழ் நனையால் தண் தேறலர், கனி குய்யாற் கொழுந் துவையர், 5 தாழ் உவந்து தழூஉ மொழியர், பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி ஏம மாக இந்நிலம் ஆண்டோர் சிலரே; பெரும! கேள் இனி ; நாளும், பலரே தகை அது அறியா தோரே! 10 அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது; இன்னும் அற்று, அதன் பண்பே; அதனால் நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை; பரிசில் நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி; அச்சுவரப் பாறுஇறை கொண்ட பறந்தலை, மாகத 15 கள்ளி போகிய களரி மருங்கின், வெள்ளில் நிறுத்த பின்றைக் , கள்ளொடு புல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி, புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு, அழல்வாய்ப் புக்க பின்னும், 20 பலர்வாய்த்து இராஅர், பகுத்துஉண் டோரே.